பிள்ளையான் விவகாரத்தில் திடீர் திருப்பம்! 24 மணித்தியாலத்தில் முக்கிய அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் அவர் பிரதான சூத்திரதாரி அல்ல அந்த விடயத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று சட்டத்தரணி மனோஜ் நாணயகார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பல விடயங்கள் பிள்ளையான் பற்றி வெளிவரும் நிலையில் குற்றப்புலனாய்வு துறையினரை மேற்கொள்காட்டி தற்போது செய்தியொன்று வெளியாகியுள்ளது.
பிள்ளையான் 2 வருடங்களுக்கு முன்னர் செவ்வியொன்றில் ராஜபக்ச குடும்பத்தில் எனக்கு முதலில் தெரிந்தது கோட்டாபய ராஜபக்சவை தான் முதலில் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வுதுறையின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர்களை விசாரணை செய்ய இந்த அரசாங்கம் பயப்படுகின்றது.
இந்த விடயத்தில் மிலிந்த மொரகொட, சுரேஸ் சலே போன்றவர்களுக்குள்ள தொடர்பு என்ன? நாளையதினம் அநுரகுமார திசாநாயக்க என்ன கூறப்போகின்றார் என்ற கேள்வியும் உள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |