மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பிள்ளையான்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்து இன்று கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கோவிட் - 19 தடுப்பூசி ஏற்ற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ள நிலையில் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு தனக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






