பிள்ளையானுக்கு பெரும் சிக்கலாகும் பிரித்தானியாவில் இருந்து வந்த டேவிட்
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தொடர்பான வழக்கு அரச வழக்காகவே நடத்தப்பட்டது.
இந்நிலையில், 20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் தந்தையின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தந்தையின் இறப்புக்கு நீதி வேண்டும் என்பதை கடந்து இது போன்ற படுகொலைகள் இனி இடம்பெறக்கூடாது என தெரிவித்திருந்தார்.
அத்துடன், தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள், தற்போது சிறையில் இருப்பதாகவும் அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தனது தாயுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தந்தை இறந்து 20 வருடங்களின் பின்னர், பிள்ளையான் சிறையில் இருக்கும் போது தான், மகனால் அஞ்சலி செலுத்த முடிந்துள்ளது.
இந்நிலையில், அவர் தனது தந்தையின் படுகொலை தொடர்பான வழக்கை மீண்டும் கையிலெடுத்தால் பிள்ளையானின் அரசியல் முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |