பிள்ளையான் கைதானமை கொடுமையான விடயமாகும்! கவலையில் கருணா
பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் எனவும், ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் எனவும் முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கருத்து வெளியிட்ட அவர்,
“மட்டக்களப்பில் ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள்.
மேச்சேல்தரைப் பிரச்சினை
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை.

இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு. தேர்தல் காலத்தில் மேச்சேல்தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை.
மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னை அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்ற உள்ளது’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam