நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மருத்துவர்கள்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நான்கு மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இடமாற்றம் தொடர்பிலான பிணக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இடமாற்றச் சபையின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாது சுகாதார அமைச்சினால் எதேச்சாதிகாரமாக மருத்துவர்களின் இடமாற்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இடமாற்றம் குறித்த பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
