சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஆதித்யா
சூரியனின் இயக்கத்தைக் காட்டும் புதிய புகைப்படங்களை ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.
அவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திங்கட்கிழமை இன்று (10) வெளியிட்டுள்ளது.
அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல்-1 படம் பிடித்ததை தொடர்ந்து சூரியனின் இயக்கநிலையை காட்டும் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

லொக்ரேஞ்சியன் புள்ளி
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 02 ஆம் திகதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது.
பூமியிலிருந்து, 15 இலட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகிலுள்ள, எல் 1 எனப்படும், லொக்ரேஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.
அந்தவகையில் அண்மையில் ஆதித்யா - எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், மே மாதத்தின்போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவுசெய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam