யாழில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் தொலைபேசி திருட்டு: ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை சந்தேகநபர் அபகரித்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அலைபேசிகளை தவறவிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள்
அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam