நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது - உபுல் ரோஹன
தற்போதைய நெருக்கடி காரணமாக நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொற்று நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்களின் வாகனங்கள் கடமை தொடர்பான விடயங்களுக்கு பயணிக்க தேவையான எரிபொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் மின்வெட்டு காரணமாக குளிர்ந்த வெப்பநிலையில் மருந்துகளை பாதுகாப்பதில் சவாலாக இருப்பதாகவும், பொது சுகாதார அதிகாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சுகாதார குறிகாட்டிகள் மத்தியில் இலங்கை தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நோய்களின் சாத்தியமான வெடிப்புக்கு கூடுதலாக, தாய் அல்லது குழந்தை இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தனிநபர்களின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு அமைப்பு குறைதல் ஆகியவை சாத்தியமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் அவர்களின் கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான குறைந்தபட்ச வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டிலுள்ள தற்போதைய நிதி மற்றும் சொத்துக்களை பாதுகாத்து அவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்துமாறு உபுல் ரோஹன பொது பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் தலையிடாவிட்டால் மோசமான சூழ்நிலை ஏற்படும் என அவர் எச்சரித்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
