அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிடும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
கோவிட் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து பொதுச் சுகாதார பரிசோதர்கள் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தியன் செயலாளர் எம்.பாலசூரிய இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கிரமமான திட்டங்களை நடைமுறைப்படுத்தாது சில அறிவிப்புக்களை மேற்கொள்வதனால் தமக்கு பெரும் சிக்கல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்வது குறித்த உரிய ஆலோசனை வழிகாட்டல்களை வெளியிடாது, சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்யும் கிரமான விதிமுறைகளை அறிவிக்காது அனுமதி வழங்கினால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை வழிகாட்டல்கள் பற்றி அறிவிக்கப்படாத காரணத்தினால் கோவிட் சடலங்களை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது குறித்து பொதுமக்களை அறிவுறுத்த தம்மால் முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri