மலேசியா- கோலாலம்பூரின் அரசு எரிசக்தி நிறுவனத்தில் தீ விபத்து- இதுவரை 33 பேர் படுகாயம்
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் அரசு எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸ் இயக்கும் எரிவாயு குழாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்று(1) இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தில் 33 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப் பணிகள்
காயமடைந்தவர்களில் ஆறு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
WATCH: Huge Gas Pipeline Explosion At Petrol Pump in #Malaysia Sends Massive Fireball Into Sky, Emergency Ops Launched (Source: Social Media) pic.twitter.com/wKyidkrx54
— Republic (@republic) April 1, 2025
தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த இடங்களிலுள்ள வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
