எரிபொருட்கள் விற்பனையில் பாரியளவு லாபம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
எரிபொருட்கள் விற்பனையின் ஊடாக அரசாங்கத்திற்கு பாரியளவில் லாபம் கிடைக்கப் பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய ஒன்றிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித இந்த தகவல்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தால் பெட்ரோலின் விலை மட்டுமன்றி ஏனையவற்றின் விலைகளும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் 8 பில்லியன் ரூபா லாபமீட்டுவதாகத் தெரிவித்து கடந்த டிசம்பர் மாதம் 200 கோடி ரூபா ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருட்கள் மீதான வரி
ஒரு லீட்டர் பெட்ரோல் விற்பனையின் மூலம் 75 ரூபாவும், ஒரு லீட்டர் டீசல் விற்பனையின் மூலம் 60 ரூபாவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விற்பனையின் மூலம் 155 ரூபாவும் லாபமீட்டப்படுகின்றது.
பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையை ஈடு செய்ய எரிபொருட்கள் மீது வரியை சுமத்தி அந்தச் சுமையையும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கான காரணத்தை பொறுப்பு வாய்ந்தவர்கள் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விற்பனையின் மூலம் பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் லாபமீட்டிய போதிலும் ஏனைய செலவுகளை ஈடு செய்யும் நோக்கில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
