பொலிஸாரின் அறிவிப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
பொலிஸார் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தி இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மூன்று பேர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் மற்றும் பயிர் செய்யப்பட்டுள்ளவற்றை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் நேற்று அறிவித்தனர்.
இதனடிப்படையில், நாளை பிற்பகல் 5 மணிக்கு முன்னர் இவற்றை காலிமுகத்திடலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோட்டை பொலிஸார் நேற்று பகிரங்கமாக அறிவித்திருந்ததுடன் இன்று அதனை அறிவித்திருந்தனர்.
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைய பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் எனவும் இந்த ஆலோசனைக்கு அமைய செயற்படாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.