நாடாளுமன்ற நிதி யோசனையை ஆட்சேபித்து உயர்நீதின்றத்தில் சிறப்பு மனுதாக்கல்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள "நிதி" என்ற யோசனையை ஆட்சேபித்து மற்றும் ஒரு சிறப்பு மனு உயர்நீதின்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் துணைச் செயலாளர் ஏகேஸ்வர கோடெகொட விதான இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த யோசனையை நாடாளுமன்றில் நிறைவேற்றும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பும் கோரப்படவேண்டும் என உத்தரவிடக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“நிதி” என்ற தலைப்பில் இந்த யோசனை 2021 ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யோசனையின் 3,4,5 மற்றும் 6 உட்பிரிவுகள் வரி செலுத்துவோர் மீது சமமற்ற முறையை ஏற்படுத்தும். அத்துடன் எந்தவொரு வரி, அபராதம் அல்லது வட்டி செலுத்த அல்லது சட்டத்தின் விதிகளின் கீழ் எந்தவொரு விசாரணை அல்லது வழக்குத் தொடரும் பொறுப்பிலிருந்து முழுமையாக விலக்களிப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
யோசனையின் 7 வது பிரிவு குடிமக்கள் தகவல் உரிமையை மீறுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். பணமோசடி எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு அல்லது பயங்கரவாத நிதியுதவி தொடர்பான இலங்கையின் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு கடமைகள்.
இத்தகைய விதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் என்பன இதன்மூலம் ஏற்படலாம் என மனுதாரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் இந்த "நிதி" யோசனை அரசியலமைப்புடன் முரண்படுவதாக கூடி மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.