மதுபானசாலைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்
மதுவரி செலுத்தத் தவறிய மதுபானசாலைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு தாக்கலானது சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த உள்ளிட்ட குழுவினரால் செய்யப்பட்டுள்ளது.
வரி செலுத்தத் தவறிய மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தவும், உரிய நிறுவனங்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கவும் உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனுவின் பிரதிவாதிகள்
மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர், அதன் அதிகாரிகள், நிதியமைச்சின் செயலாளர், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் பலர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |