போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் ஈரான் - கடும் கண்டனம் விடுத்த அமெரிக்கா!
ஈரான் மேலும் கடலில் கண்ணிவெடிகளை பதிக்க முயன்றால், அது தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது போன்ற செயலாகும் என அமெரிக்க பாதுகாப் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், மேலும் தெரிவிக்கையில்,
“ஈரான் மீண்டும் பொறுப்பில்லாமல் கண்ணிவெடிகளை பதிக்க முயன்றால், அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம், அது போர் நிறுத்தத்தை மீறுவதாகும்” என்றார்.
ஈரானின் பொறுப்பற்ற செயல்
அத்துடன், ஹோர்முஸ் வழியாக சிறிய அளவிலான கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது என்றும் ஹெக்செத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் “சில வழிகள் திறந்திருக்கின்றன” என்று கூறியதுடன் “போக்குவரத்து நடைபெறுகிறதாகவும் குறித்த தகவலில் விளக்கியிருந்தார்.
ஆனால், அந்த கப்பல் போக்குவரத்தானது அனைவரும் எதிர்பார்ப்பதை விட குறைவான அளவில் காணப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கான காரணம் என்னவென்றால், ஈரான் சிறிது வேகமான படகுகளை பயன்படுத்தி பொறுப்பில்லாத செயல்களில் ஈடுபடுவதே ஆகும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam