வயோதிப பெண்ணை உயிரிழக்கும் வரை கடித்த வளர்ப்பு நாய்
அஹங்கம பிரதேசத்தில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாய் தாயின் மார்பைக் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாய் கடித்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம - திகபெத்த, கோதாகொட கமகே பகுதியைச் சேர்ந்த தயாவதி என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri