ஈரானின் இரகசிய இராணுவ தளங்களுக்குள் நுழைந்த நபர் - அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது இராணுவத்தளம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அமீர்ஹுசைன் ஹதாமி (Amirhossein Hatami) என்பவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்டமை, ரகசிய இராணுவ தளங்களுக்குள் நுழைந்ததமை மற்றும் அரசு சொத்துக்களுக்குத் தீ வைத்து சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
ஈரான் அரசு கடுமையான நடவடிக்கை
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி முகவரகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஈரானை உலுக்கிய மாபெரும் மக்கள் போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அந்தப் போராட்டங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே அமீர்ஹுசைன் ஹதாமிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விசாரணை முறையான சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
அதிகாலை இடம்பெற்ற கொடூரம்: கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரட்டை கொலை - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!