யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது(Photo)
சாவகச்சேரி மதுவரி திணைக்களத்துக்கு
அருகாமையில்உள்ள வீட்டில் பியர் மற்றும் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் நேற்று(05.02.2023) யாழ்
மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
போயா தினமாகிய நேற்றைய தினம் சாவகச்சேரி மது வரி திணைக்களத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் சாராயம் மற்றும் பியர் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த இடம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அதிகளவிலான சாராய பொருட்கள் மற்றும் பியர்
ரின்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
