வாழைச்சேனையில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (30) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலை- மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட நபரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 கஜ முத்துக்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
