கொழும்பில் அமைச்சரை நோக்கி கூச்சலிட்ட நபர் கைது
கொழும்பின் பிட்டிபன சந்திக்கு அண்மித்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கூச்சலிட்ட நபர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்ட போது, லொறியில் சென்ற ஒருவர் அமைச்சரை நோக்கி சத்தமிட்டுள்ளார். சந்தேகநபர் ஹோமாகம பிரதேசத்தின் 43 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் துரித செயல்
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், லொறியை துரத்திச்சென்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மதச்சடங்குகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக மதத்தை கடைப்பிடிக்கும் உரிமைக்கு சவால் விடுத்ததாகவும் குற்றம்சுமத்தி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.