வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை:ஒருவர் கைது (Video)
வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்வதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடியின் ஆலோசனையில் பொலிஸ் குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் குறித்த நபர்களை மறித்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.
400 மருந்து வில்லைகள் மீட்பு
இதன்போது அவரின் உடமையிலிருந்து போதையினை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த வில்லைகளை வைத்திருந்த 23வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மருந்து மருந்து வில்லைகள் அளவிற்கு அதிகமாக உள்கொள்ளும் சமயத்தில் போதையினை ஏற்படுத்தக்கூடியது எனவும் மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்தினை இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரையில் விற்பனை செய்வது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
