புத்தாண்டுக்கு தயாரான நபருக்கு நேர்ந்த விபரீதம்
பலாங்கொடை - சத்தல்பொல பிரதேசத்தில் வெற்றிலை பாக்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறியவர் மரத்தில் இருந்து கிளை ஒன்று விழுந்ததில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துங்கிந்த திஸாநாயக்கலைச் சேர்ந்த சந்திரசிறி என்ற ஐம்பத்திரண்டு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
புத்தாண்டு பண்டிகைக்கு தேவையான வெற்றிலையை பறிக்க தோட்டத்தில் உள்ள நாற்பது அடி மரத்தில் ஏறியபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மரத்தின் அழுகிய கிளை ஒன்று முறிந்து விழுந்த போது மரக்கிளையுடன் விழுந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |