சட்டவிரோதமாக எரிபொருட்களை கடத்தும் சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது
நாட்டில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் ஆங்காங்கே சட்டவிரோதமாக எரிபொருட்களை கடத்தும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதற்கமைய கிண்ணியா பகுதியில் சட்டவிரோதமாக பெட்ரோல் ஏற்றிச் செல்ல முயன்ற மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று(15) மாலை கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக வியாபார நோக்கில் கிண்ணியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த மூன்று கலன்களும் மற்றும் போத்தல்களிலும் பெட்ரோல்களை சட்ட விரோதமாக நிரப்பி ஏற்றி செல்ல இருந்தபோது கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
65 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
மேலும் முல்லைத்தீவு - வலைஞர் மடம் சந்திப்பகுதியில் பெட்ரோலினை கேனில் கொண்டு சென்ற ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(15) மாலையளவில் இடம்பெற்றுள்ளது.
16 லீட்டர் பெட்ரோலினை கேனில் கொண்டு சென்ற வேளை பொலிஸார் சோதனை செய்தபோது அவர்
சட்டத்திற்கு முரணாக எரிபொருளை கொண்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருட்களை கேன்களில் வைத்திருக்கும் நபர்களை
கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.