33 ஆண்டுகளுக்கு பின் கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி (Photos)
கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு 33 வருடங்களுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டுக்கு பின் தற்போது ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆலயத்தில் வழிபாடுகள்
இந்த கோரிக்கைக்கு அமைவாக விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (22.09.2023) மாலை இராணுவத்தினரின் அனுமதியுடன், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் குருமார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam