33 ஆண்டுகளுக்கு பின் கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி (Photos)
கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு 33 வருடங்களுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டுக்கு பின் தற்போது ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆலயத்தில் வழிபாடுகள்
இந்த கோரிக்கைக்கு அமைவாக விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (22.09.2023) மாலை இராணுவத்தினரின் அனுமதியுடன், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் குருமார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
