திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
திருமண வைபவங்களை மதுபான உபசாரமின்றி நடத்தவும், பூரணமாகத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களை மாத்திரம் திருமண வைபவங்களில் அனுமதியளிக்கும் வகையிலும் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தற்போதைய சட்டக்கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண வைபவங்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
கோவிட் சுகாதார வழிகாட்டலின் கீழ், அனுமதி வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விருந்தினர்களைக் கொண்டு திருமண வைபவங்களை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் நிலை காரணமாகக் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கத்தினால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
