மட்டக்களப்பு - பெரிய கல்லாறு கிராமசேவகர் பிரிவு முடக்கப்பட்டது!
மட்டக்களப்பு - பெரிய கல்லாறு கிராம சேவகர் பிரிவு இன்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 கிராம சேவகர் பிரிவுகளில் 4 ஆயிரத்து 519 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கின்றனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயணி கூட்டம் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்றது, இதில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 21ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளனர்.
வழமையாக 100 பேர் என்ற வீதத்தில் தொற்றாளர்கள் இனங்கானப்படுவது வழக்கம். இருந்த போதும் தற்போது தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையிலே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார முறைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், பிரதேச செயலக அடிப்படையில் பிரதேச செயலாளர் சுகாதார அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் கூட்டத்தை கூடி அந்த பகுதியில் இடம்பெறும் விளைவுகளின் தரவுகளை சேகரித்து தீர்மானங்களை எடுத்து அறிவிப்பதன் மூலம் நாங்கள் அதனை நாட்டின் உயர் பகுதிக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த முடியும்.
ஒரு வீட்டில் மரணம் நடந்தால் மரணத்தை தொடர்ந்து அந்த வீட்டிலே உறவினர்கள்
ஒன்றாக கூடுவது வழக்கம், இதனால் சமூக நெருக்கங்கள் ஏற்படுகின்றது. இதனால் தொற்று
அதிகரிக்கின்றது.
எனவே இன்றில் இருந்து மரணம் இடம்பெற்றால் அந்த வீட்டிற்கு பொது சுகாதார அதிகாரிகளால் அறிவித்தல் விடப்படும், அதனடிப்படையில் தேவையின்றி கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதனை மீறி கூடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை மாவட்டுத்தில் 24 ஆயிருத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு அடுத்த கட்ட தடுப்பூசி எதிர்வரும் தினங்களில் வந்தடைந்ததும் . அதனை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட் பின்னர் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் ஓன்றாக கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் பொலிசார் கண்டிப்பாக செயற்படுவார்கள். எனவே பொதுமக்கள் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்து ஒத்துழைப்பு வழங்கி செயற்படவும் என அவர் தெரிவித்தார்.