இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியானது அறிக்கை
இலங்கையின் அதிகாரபூர்வ வறுமைக் கோடு, டிசம்பர் 2025 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரியில் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்த வறுமைக் கோடு 2025 டிசம்பரில் ரூ.16,658 ஆக இருந்து 2026 ஜனவரியில் ரூ.16,730 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, கொழும்பு மிக உயர்ந்த வறுமைக் கோட்டைப் பதிவு செய்துள்ளது.
ஜனவரியில் ரூ. 18,044 ஆக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, இது டிசம்பர் 205 இல் ரூ.17,966 ஆக இருந்தது.

கொழும்பிற்கு அருகிலுள்ள கம்பஹா மாவட்டம் ரூ.17,951 வறுமைக் கோட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து ரூ.17,593 வறுமைக் கோட்டுடன் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மொனராகலை, கிளிநொச்சி மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்கள் முறையே ரூ.15,997, ரூ.16,163 மற்றும் ரூ.16,255 வறுமைக் கோடுகளுடன் குறைந்த தரவரிசையில் உள்ளன.
அதிகாரபூர்வ வறுமைக் கோடு என்பது உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தைக் குறிக்கிறது.
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam