24 மணிநேரம் வரிசையில் நின்று எரிபொருள் பெற்ற மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களாக எரிபொருள் வரிசைகள் பாரிய அளவில் அதிகரித்து வருகின்றன.
எரிபொருளைப் பெறுவதற்கு 24 மணித்தியாலங்களுகும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்தனர்.
தம்புள்ளையிலுள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, கார் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுடன் வரிசையில் நிற்கின்றனர்.
கேன்களில் எரிபொருள் வழங்காததால் விவசாயிகள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளதென தெரியவந்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பல இயந்திரங்களுடன் விவசாயிகள் வரிசையில் காத்திருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.










சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
