பிரான்ஸில் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்த பொலிஸார்
பிரான்ஸில் 40 புலம்பெயர்ந்தவர்களுடன் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் Boulogne-sur-Mer வடக்கே Wimereux க்கு அருகே உள்ள D237 சாலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு வாகன சாரதியையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை பிரான்ஸின் கடற்கரை நகரமான Wimereux-ல் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழக்கும் அபாயம்
Wimereux நகரை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து நீண்ட காலமாக மனித கடத்தல்காரர்கள் பிரித்தானியாவுக்கு படகுகளை செலுத்துகின்றனர்.
கடந்த சனிக்கிழமை ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட 5 நபர்கள் Wimereux கடற்கரையில் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் குளிர் நீரில் தாழ்வெப்பநிலை (hypothermia) பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 38 நிமிடங்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
