நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்: மகிந்த
சவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தொிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு களுத்துறையில் (Kalutara) நேற்று (06.07.2024) நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ”நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க தயங்கியவர்கள் இன்று நாட்டில் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.
மக்களின் ஆதரவு
நெருக்கடி ஏற்பட்ட போது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியாதவர்கள் இன்று மக்கள் மத்தியில் சென்று தங்களுக்கு தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோருகின்றனர்.

நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இட்டுச் செல்வதே அவர்களின் நோக்கமாகும்.
எனவே, சவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam