மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சியினர்: குற்றம் சுமத்தியுள்ள மனுஷ நாணயக்கார

Matara Manusha Nanayakkara Sri Lanka Politician
By Bavan Jul 07, 2024 09:40 AM GMT
Report

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை செய்துமக்களை ஏமாற்றுகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். 

மாத்தறை (Matara) - ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

"நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

மூலிகை செடியின் பழ விதைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மூலிகை செடியின் பழ விதைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஜனாதிபதியின் நடவடிக்கைகள்  

எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும் போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஊட்டச்சத்து குறைபாடு நல்லதா கெட்டதா என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார்.

மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சியினர்: குற்றம் சுமத்தியுள்ள மனுஷ நாணயக்கார | Manusha Nanayakara Blames Opponant Party

இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடு சென்று பணம் அனுப்புகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த குழந்தைகளை நேசிப்பதால் ஆறுதல் மற்றும் உணவு கொடுக்கிறார். நாட்டின் துரதிஷடங்களை மாற்றி நல்லவர்களாக மாற்ற முயற்சிக்கிறோம்.

எமது பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய போது, ராஜபக்சக்கள் திருடுவார்கள் அனுப்ப வேண்டாம் என ஜே.வி.பியினர் கூறினார்கள். 

கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகள்!

கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகள்!

பல்கலைக்கழக திட்டம்  

ஆனால், அந்த பெற்றோர்கள் அதை நம்பாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் நாட்டின் மீதுள்ள அன்பினால் 12 பில்லியன் டொலர்ககளை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனால் தான் இந்நாட்டு மக்கள் மீண்டும் உணவும் பணமும் பெற முடிந்தது.

மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சியினர்: குற்றம் சுமத்தியுள்ள மனுஷ நாணயக்கார | Manusha Nanayakara Blames Opponant Party

அதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும் எதிர்க்கப்பட்டது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது, மொனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வந்தது. ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கவில்லை.

அந்த பல்கலைக்கழக திட்டம் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அது மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது. இது பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயாக ஈட்டுகிறது.

இந்த ஆண்டுக்குள் செயற்பட தயாராகும் தேசிய விமான சேவை

இந்த ஆண்டுக்குள் செயற்பட தயாராகும் தேசிய விமான சேவை

நாட்டின் தலையெழுத்து 

ஜே.வி.பி யின் செயற்பாடுகள் இவ்வாறு தொடர்ந்தால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே, ஜனாதிபதி உரையாற்றுகையில், 'என்னில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற சுலோகத்துடன் ஆரம்பித்தார்.

மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சியினர்: குற்றம் சுமத்தியுள்ள மனுஷ நாணயக்கார | Manusha Nanayakara Blames Opponant Party

அரசியலில் எவ்வகையான சவால்கள் காணப்பட்டாலும் என்னில் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். தற்போதைய அமைச்சரவை இந்த சவாலை கையில் எடுத்துக் கொண்டது.

அரச அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டனர். நாட்டின் தலையெழுத்தையே இந்த சவால் மாற்றியமைத்தது.

அரச அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் காரணமாக மிகக் குறுகிய இரண்டு வருட காலப்பகுதியில் எல்லையில்லாத, வரையறுக்கப்படாத பல சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க நாம் என்னிலிருந்து ஆரம்பிக்க முன்வர வேண்டும். மாத்தறையில் உள்ள அனைவரையும் என்னுடன் கைகோர்க்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

இலங்கையை வெற்றி கொள்வோம் என்ற கோசம் வெறுமனே கனவல்ல. இதுதான் நாட்டின் வெற்றி என்றார்” என குறிப்பிட்டுள்ளார். 

மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில்

மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில்

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US