வருமானம் பெற வழியில்லை என்பதால் சிலர் கசிப்பு விற்கின்றனர் - அருந்திக பெர்னாண்டோ
வாழ்க்கை நடத்த வருமானம் பெற வழியில்லை என்பதன் காரணமாகவே சிறியளவில் சிலர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாராந்த சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே பெரியளவில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத காரணத்தினாலேயே சிலர் சிறியளவில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பதால், பிரச்சினை தீராது.
இவர்களுக்கு வேறு வாழ்வாதார வழியை உருவாக்கிக் கொடுத்தால், கசிப்பு விற்பனையிலிருந்து விலகி விடுவார்கள்.
இதுதான் உண்மை. காரணத்திற்கான தீர்வை காணாது பலனில்லை எனவும் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.