போராட்டக்களத்திற்கு விரைந்த அரசியல்வாதிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு - செய்திகளின் தொகுப்பு
காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டக் களத்தில் தற்போது பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரட்டியாக்கப்பட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் சில கும்பல் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் போன்றவற்றை அடித்து உடைத்து தீ வைத்துள்ள நிலையில் போராட்டக் களம் யுத்த களமாகக் காட்சி அளிக்கின்றது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கலகக் காரர்கள் அவரது வாகனத்திற்குக் கல்லெறிந்து கலைத்து விரட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,