வரிசையில் நின்ற மக்கள்: எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மை (Photos)
மலையகத்தில் பிரதான நகரங்களில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெற்றமையால் மக்கள் வரிசையில் நின்று எரிவாயுவை பெற்றுக்கொண்டதுடன், வரிசையில் காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அப்பகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது.
குறித்த எரிவாயு நிலையங்களுக்கு 7 நாட்களுக்குப் பிறகு இன்று லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் எரிவாயுவைக் கொள்வனவு செய்யக் காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.
எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று 100ற்கும் குறைவான சிலிண்டர்களே கடைகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் இதனால் அங்கு ஒன்றுகூடிய அனைவரினதும் தேவையை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக எரிவாயு விற்பனையாளர் கூறியுள்ளார்.
May you like this Video









இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
