இலங்கையில் மூன்று மாத காலத்தில் 3516 ஆர்ப்பாட்டங்கள்
நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலத்தில் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் மண் எண்ணெயை கோரி 3 ஆயிரத்து 516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள்
கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் சமையல் எரிவாயுவை கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு கோரி ஆயிரத்து 185 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெற்றோலை கோரி ஆயிரத்து 173 ஆர்ப்பாட்டங்களும், டீசலை கோரி ஆயிரத்து 5 ஆர்ப்பாட்டங்களும், மண் எண்ணெயை கோரி 153 ஆர்ப்பாட்டங்களும் இந்த காலப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளன.
ஒரு வாரத்தில் மாத்திரம் 1111 ஆர்ப்பாட்டங்கள்
மே மாதம் 2 ஆம் திகதி முதல் மே மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்திலேயே இவற்றில் அதிகளவான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
அந்த வாரத்தில் நாடு முழுவதும் ஆயிரத்து 111 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
