வவுனியா- செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டம் முன்னெடுப்பு

Vavuniya SL Protest Northern Province of Sri Lanka
By Thileepan Jul 22, 2025 06:00 AM GMT
Report

வவுனியா, செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று(21)கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தமக்கு அருவித்தோட்டம் பகுதியில் வழங்குவதாக கூறிய ஒரு ஏக்கர் விவசாய காணியினை வழங்க வேண்டும் என தெரிவித்தே மக்கள் இந்தப் போராட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் வரி தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் வரி தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

குடியேற்றம்

இதன்போது, போரட்டக்காரர்கள் 'அரச அதிகாரிகளே ஏழைகளின் ஒருவேளை உணவை நிம்மதியாக உண்ணவிடு, மெனிக்பாமில் வசிக்கும் மக்களுக்கு வயல் காணி ஒரு ஏக்கர் வீதம் வழங்கு' போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், எங்களை 2004ஆம் ஆண்டு சிதம்பரபுரம் முகாமில் இருந்து மெனிக்பாமிற்கு அரை ஏக்கர் மேட்டுக்காணி மற்றும் 01 ஏக்கர் வயல் காணி தருவாதாக தெரிவித்து குடியேற்றம் செய்தனர். ஆனால் தற்போது வரை எங்களிற்கு 01 ஏக்கர் வயல் காணி தரப்படவில்லை.

வவுனியா- செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டம் முன்னெடுப்பு | People Protest In Demanding Agricultural Land

மேலும் கூலி வேலையினை மேற்கொண்டே எமது வாழ்வாதாரம் போகின்றது. அத்தோடு கடந்த காலத்தில் கிராம சேவையாளர் இடம் சென்றும் வயல் காணி தொடர்பாக நாங்கள் பதிவு செய்திருந்தோம். அதன் மூலமாக ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. ஆனால் 20 வருடமாகியும் எங்களிற்கு கிடைக்கவில்லை.

அத்தோடு அருவித்தோட்டம் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் பல ஏக்கரில் வயல் காணிகளை பெற்று வயல் செய்கின்றனர். ஆனால் எங்களிற்கு எந்த வயற் காரணிகளும் கிடைக்கவில்லை. எனவே எங்களிற்கு தருவதாக தெரிவித்த வயற்காணியினை தரவேண்டும் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் 2004ஆம் ஆண்டில் இருந்து அருவித்தோட்டம் பகுதியில் மானாவாரியாக அரை ஏக்கர் மற்றும் ஒரு ஏககரில் பயிர் செய்து வந்திருந்தோம். 2005, 2006, 2007 காலப் பகுதியில் காணியினுள் இராணுவம் எங்களை நுழைய விடாமல் எங்களை வற்புறுத்தி இராணுவத்திற்கு வழங்க கோரியிருந்தனர்.

மேலும் குறித்த காணிகள் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 13 ஏக்கர் அடிப்படையில் வழங்கப்பட்ட காரணிகளாகும். மேலும் இக்காணி உரித்தினை நீக்கி வேறு ஒருவருக்கு வழங்க முடியாத நிலையும் இருந்தது. இந்நிலையில் குறித்த காணிக்குரியவர் இல்லாத நிலையில் காணி இல்லாதவர்கள் கூட குறித்த காணிகளை துப்பரவு செய்து பயிர் செய்கை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் கமநல சேவை நிலையத்தாலும் அனுமதி வழங்கப்பட்டது.

செம்மணி மனித எச்சங்கள்: உண்மைகளை வெளிக்கொண்டு வர வழி கூறும் சுமந்திரன்

செம்மணி மனித எச்சங்கள்: உண்மைகளை வெளிக்கொண்டு வர வழி கூறும் சுமந்திரன்

காணி வழங்குவதற்கான நடவடிக்கை

குறிப்பாக 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச காலத்தில் எந்தவொரு நிலமும் பாவனையின்றி இருக்கமுடியாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. மேலும் காணி இல்லாதவர்களிற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட போது மூவர் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் போது இருவர் அவற்றினை கைவிட்டு செல்லும் நிலை காணப்பட்டதுடன், கைவிடப்பட்ட பகுதிகள் காடுகளாக காணப்பட்டமையால் காட்டு விலங்குகளின் தாக்கம் பெருமளவு ஏற்பட்டது.

இதன்போது பிரதேச செயலகத்தால் குறித்த பகுதியினை அருகில் உள்ளவர்கள் துப்பரவு செய்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டதுடன், உரியவர்கள் வரும் போது நட்ட ஈட்டினை பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும் என பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா- செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டம் முன்னெடுப்பு | People Protest In Demanding Agricultural Land

மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் பத்து ஏக்கர், பதினைந்து ஏக்கர் என செய்வதாக கூறினர். இது தவறான கருத்தாகும். ஏனெனில் குறித்த காணிகளிற்கு உரியவர்கள் குத்தகைக்கே வழங்கியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு காணி அடையாளப் படுத்தப்பட்டும் காணியினை துப்பரவு செய்து எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் இது தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் சுலோஜனா  நேரடியாக சென்று கலந்துரையாடிய போது, குறித்த அருவித்தோட்டம் பகுதியில் விவசாயம் செய்வதற்கு மேலும் காணி இருப்பதாக பிரதேச செயலாளரினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு குறித்த காணியினை துப்பரவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த காணியினை பெற்றுத் தருவதற்கான தீர்மானத்தினை மேற்கொள்ளவதாக போராட்டக்காரர்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் குறித்த போராட்டமானது கைவிடப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்

பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை என்னிடம் தாருங்கள்! வலியுறுத்தும் தேரர்

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை என்னிடம் தாருங்கள்! வலியுறுத்தும் தேரர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US