கொழும்பில் எரிவாயு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம் (Video)
கொழும்பு - மருதானை ஆனந்த கல்லூரிக்கு முன்பாக எரிவாயு கொள்கலன்களை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிவாயு இன்மை, பெட்ரோல் இன்மை, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு என மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எரிவாயு கொள்கலன்களை பெற்றுகொள்ளும் நோக்கில் மக்கள் பல மணி நேரங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இறுதி நேரங்களில் மக்களுக்கு பொருட்களை பெற்றுகொள்ள முடியாத நிலை ஏற்படும் போது மக்கள் விரக்தியில் வீதிக்கிறங்கி தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,