முறிகண்டியில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த திரண்ட மக்கள் (Video)
வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் எதிர்பாப்புடன் முறிகண்டி மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
பிரதான வாய்க்கால்களில் காணப்படும் பற்றைகளினால் உக்கும், உக்காத பொருட்கள் அடைபட்டு வெள்ள நீர் மக்கள் குடியிருப்புகளிற்குள் புகுந்து வருகின்றது.
இதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலை ஏற்பட்டதுடன், போக்குவரத்து செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.
மாபெரும் சிரமதான பணி
இந்த நிலையில், முறிகண்டி வர்த்தகர் சங்கம், கிராம மட்ட அமைப்புக்கள், பொது மக்களுடன் இணைந்து மாபெரும் சிரமதான பணியை இன்று ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது, பிரதான வாய்க்கால்களில் காணப்பட்ட பற்றைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதன்போது பெரும் தொகையான பிளாஸ்ரிக் போத்தல்கள் அகற்றப்பட்டு பிரதேச சபையினர் ஊடாக வெளியேற்றப்பட்டது.
வெள்ள நீர் தடையின்றி வாய்க்கால்கள் ஊடாக கடந்து செல்லும் வகையில் முன்னெடுக்கப்படும் குறித்த சிரமதான பணி ஊடாக வெள்ள அனர்த்தம் கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்படுகிறது.

பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி: ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
