திருகோணமலையில் அடாத்தாக கபளீகரம் செய்யப்படும் காணிகள்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை நிலாவளி வீதி, ஆறாம் கட்ட பிரதேசத்தில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டுள்ளதால் 30இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (01.10.2024) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
குறித்த நடவடிக்கைகள் முன்னால் கிழக்கு ஆளுனரின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
பாதிரியார் ஆதங்கம்
கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் இந்த காணிகளில் வசித்து வருகின்ற நிலையில் பிரான்சிலிருந்து வருகை தந்த ஒரு நபர், இவை தன்னுடைய காணி என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதற்கான வழக்கு தற்போது நடந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக அங்கு ஒரு கிறிஸ்தவ மதஸ்தலம் ஒன்றுக்கான பாதை மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் மக்கள் அநேகர் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறித்த கிறிஸ்தவ மதஸ்தல பாதிரியார் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் எங்களது பூர்வீக குடியிருப்பு காணிகளை பாதுகாத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
