பொலிஸார் ஒரு நாளில் பல தடவைகள் எரிபொருள் நிரப்புகின்றனர்! கொழும்பில் மக்கள் குற்றச்சாட்டு
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரும் பொது மக்கள், பொலிஸார் மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி குறித்த பகுதியில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் போதும் பொலிஸார் வாகனங்களை கொண்டு வந்து இடையில் சென்று எரிபொருளை பெற்றுக் கொள்வதாகவும், இரண்டு அல்லது மூன்று முறை கூட ஒரே பொலிஸ் உத்தியோகத்தர் வாகனங்களில் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்தியாவசிய சேவை என தெரிவித்து வைத்தியர்கள், பொலிஸார் உள்ளிட்டோர் வந்து எரிபொருளை வாகனங்களில் நிரப்பிக் கொண்டு செல்லும் நிலையில் அன்றாடம் முச்சக்கரவண்டி மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் தாம் நாள் கணக்கில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
