கடனாளிகளாக மாறியுள்ள நாட்டு மக்கள்: ரஞ்சித் ஆண்டகை
நாட்டு மக்கள் நீண்ட கால கடனாளிகளாக மாறியுள்ளனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இறையாண்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு இருபது ஆண்டுகள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை எவ்வாறான நற்செய்தியாக கருதப்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்
அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம், நாட்டு மக்களுக்கு நற்செய்தி என்ற வகையில் பிரசாரம் செய்திருந்தது.
இந்த பிரசாரத்தை விமர்சனம் செய்யும் வகையில் கர்தினால் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அரசியல் தலைவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதாகவும் இதனால் நாட்டின் இறையாண்மை இல்லாமல் போவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam