கடனாளிகளாக மாறியுள்ள நாட்டு மக்கள்: ரஞ்சித் ஆண்டகை
நாட்டு மக்கள் நீண்ட கால கடனாளிகளாக மாறியுள்ளனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இறையாண்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு இருபது ஆண்டுகள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை எவ்வாறான நற்செய்தியாக கருதப்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்
அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம், நாட்டு மக்களுக்கு நற்செய்தி என்ற வகையில் பிரசாரம் செய்திருந்தது.
இந்த பிரசாரத்தை விமர்சனம் செய்யும் வகையில் கர்தினால் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அரசியல் தலைவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதாகவும் இதனால் நாட்டின் இறையாண்மை இல்லாமல் போவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
