பொலிஸாருக்கு எதிரான மக்களின் மனநிலை! அமைச்சரின் வலியுறுத்தல்
பொலிஸார் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மகியங்கணை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸார் நித்திரை கொள்கின்றனரா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காவு கொள்ளப்படும் உயிர்கள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் மூலம் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுபவதுடன் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமை.
நீதியை நிலைநாட்டுவதற்கு காலம் தாழ்த்தப்படக் கூடாது. அவ்வாறு உரிய நேரத்தில் நீதி நிலைநாட்டப்படாவிட்டால் பெரும் சோகங்கள் நிகழக்கூடும்.

பொலிஸார் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam