பொலிஸாருக்கு எதிரான மக்களின் மனநிலை! அமைச்சரின் வலியுறுத்தல்
பொலிஸார் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மகியங்கணை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸார் நித்திரை கொள்கின்றனரா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காவு கொள்ளப்படும் உயிர்கள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் மூலம் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுபவதுடன் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமை.
நீதியை நிலைநாட்டுவதற்கு காலம் தாழ்த்தப்படக் கூடாது. அவ்வாறு உரிய நேரத்தில் நீதி நிலைநாட்டப்படாவிட்டால் பெரும் சோகங்கள் நிகழக்கூடும்.

பொலிஸார் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri