வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு மீண்டும் மக்களுக்கு அனுமதி
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு பொது மக்களுக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதன் இரண்டாவது நாளாக இன்று (03.03.2024) கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பூஜை வழிபாடுகள்
இந்த பகுதியிலிருந்து 1990ஆம் ஆண்டு தீபாவளி நாளில் இராணுவ நடவடிக்கை காரணமாக தாம் குறித்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்று தற்போது 34 வருடங்களின் பின்னர் ஆலயத்தை வந்தடைந்து தற்போது தரிசிக்கும் வாய்ப்பினை இராணுவத்தினர் ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆலயத்தின் பூசகர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த ஆலயங்களுக்கு சென்று வருவதற்கு இராணுவத்தின் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கோயிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் மாத்திரம் ஈடுபட்டு திரும்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று 30இற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தமது ஆலயங்கள், ஆலய சூழலை அண்டிய தமது காணிகள் என்பவற்றை வெகு விரைவில் விடுவித்து குடியமர்வதற்கு ஏற்றவாறு அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
