மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இரு இளைஞர்கள் பலி
பிலியந்தலை வீதியின் நீலம்மஹர சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு இளைஞர்களும் மஹரகமவிலிருந்து பிலியந்தலை வீதியில் வந்து பாதுகாப்பற்ற முறையில் நீலம்மஹர நோக்கித் திரும்பும் போது, பிலியந்தலையிலிருந்து மஹரகம நோக்கிச் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |