பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்! பிரான்ஸ் அரசின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலின் "பெகாஸஸ்" உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பெகாஸஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி, பிரான்ஸில் செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், எதிா்க்கட்சியினா் ஆகியோரது மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்போது அதிபர் இம்மானுவேல் மெக்ரான் செல்போனும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் மத்திய அரசு தாங்கள் அதுபோல உளவு பார்க்கவில்லை என விளக்கம் அளித்துள்ளதுடன்,விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என கூறப்படுகின்றது.
அதேநேரம், பிரான்சில் தனிநபா் ரகசியத் தகவல்கள் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதா, தகவல்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டனவா, சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்றதா என விசாரணை நடைபெறும் என்று பிரான்ஸ் அரசின் நீதி அமலாக்கத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் அந்த நாடுகளின் அரசுக்கு எதிரான 1000த்திற்கும் மேற்பட்டவா்களின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.
2019ல் நடைபெற்ற இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த சாப்ட்வேர், அரசு கேட்டால் மட்டும் தான் வழங்கப்படுமே தவிர தனி நபர்களுக்கு தரப்படாது என்பதால், அரசு மீது குற்றச்சாட்டு எழுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022