கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி பலி; மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயம்
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவரை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது.
வீதியில் பாதசாரியாக பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
