வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு கோவிட் தொற்று
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று எழுபத்தைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, கண்ணகிபுரம் ஆகிய பிரதேசத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் எழுபத்தைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கடந்த சனிக்கிழமை 81 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதில் ஒரு பொலிஸாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ்
தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளால்
பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி
நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி
தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.