68 கர்ப்பிணி தாய்மாருக்கு பி.சீஆர் பரிசோதனை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 68 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோவிட் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே குறித்த பரிசேதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.