சர்ச்சைக்குரிய தனது கருத்துக்கு மீண்டும் மன்னிப்பு கோரிய போதகர் ஜெரோம்
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த, இந்து, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏனைய மதங்கள் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கரத்த நாட்டில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையல், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் அவருக்கு எதிராக பயணத்தடையும் விதிக்க நிதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
அடிப்படை மனு தாக்கல்
இவ்வாறான நிலையில், கடந்த 21ஆம் திகதி தனது கருத்தினால் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு மன்னிப்பு கோருவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், தம்மை கைத செய்வதை தடுக்கக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் நேற்றையதினம்(26.05.2023) அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தனது கருத்து தொடர்பில் மீண்டும் இன்றையதினம் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
