24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட 11 சிறுமியர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 50 வயதான விவசாயி என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
இந்த விவசாயி, கபுகொல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 3 சிறுமியரை ஓராண்டு காலமாக பாரதூரமான முறையில் தகாத செயற்பாடுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய விவசாயி குறித்த சிறுமியரின் குடும்ப உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்புறுபிட்டி, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹுங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் சிறுவர்கள் தொடர்பான இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
